விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகள்… 1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூல் : போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி!
பொங்கல் பண்டிகைப்பட்டியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களிடம் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசுலிப்பதாக புகார் எழுந்த நிலையில், ஆம்னி பஸ்களில் கட்டண தொடர்பாக ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வேலூர் போக்குவரத்து சரக்கத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் உள்ள டோல்கேட்களில் போக்குவரத்து துணை ஆணையர் நெல்லையப்பன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கடந்த 10 ம் தேதி முதல் 12 ம் தேதி நேற்று இரவு வரை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், நான்கு மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 255 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 31 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகள் மீறியும் உரிய அனுமதி இன்றியும் இயங்கியதால் அந்த வாகனங்களுக்கு 1 லட்சத்து 71 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், அதிக கட்டணம் கொள்ளை மற்றும் விதிவிரல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.