திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று இரவு வேடசந்தூர் – திண்டுக்கல் சாலையில் சாலையில் நாகம்பட்டி அருகே உள்ள கியாஸ் பங்க்கில் காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு மீண்டும் வேடசந்தூர் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணம்பட்டியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்த கியாஸ் பங்க் ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்த நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.