திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று இரவு வேடசந்தூர் – திண்டுக்கல் சாலையில் சாலையில் நாகம்பட்டி அருகே உள்ள கியாஸ் பங்க்கில் காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு மீண்டும் வேடசந்தூர் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணம்பட்டியை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்த கியாஸ் பங்க் ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்த நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.