தமிழகம்

ஜாமீனில் வெளியே வந்ததும் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. சிவகங்கையில் ஷாக்!

சிவகங்கையில், ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், பள்ளத்துாரில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. மேலும், பள்ளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்பாண்டி (25). இவரது தந்தையான ராஜசேகர், அடிக்கடி மது அருந்தி வந்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ராஜேஷ்பாண்டி, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று இரவு, பள்ளத்துார் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதில் கடையில் இருந்த விற்பனையாளரான, இளையான்குடி அருகே உள்ளஇண்டங்குளத்தை சேர்ந்த அர்ச்சுனன் (46) படுகாயம் அடைந்தார்.

மேலும் கடையில் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களும் எரிந்து நாசமாகின. அது மட்டுமின்றி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த அர்ச்சுனன், 2023ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ராஜேஷ் பாண்டியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ராஜேஷ் பாண்டி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவ்வாறு வந்த ராஜேஷ்பாண்டி, நேற்று முன்தினம் இரவு அதே மதுக்கடைக்கு பெட்ரோலுடன் சென்று, குண்டு வீச முயற்சித்துள்ளார். எனவே, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!

இந்தத் தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பள்ளத்துார் போலீசார், ராஜேஷ்பாண்டியை மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.