கோவை அடுத்த பேரூர், சிறுவாணி சாலையில் மேற்கு புறவழிச் சாலைக்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் நடுவே 16 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த இடத்தில் தடுப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. ஆனாலும் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன.
மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டும், இதன் காரணமாக சாலை பள்ளம் இருப்பதை அறியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற பேரூர் தேவராயபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி கார்த்திக் மோட்டார் சைக்கிளுடன் 16 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் பள்ளத்தின் அருகே எச்சரிக்கை அறிப்பு, தடுப்பு போன்றவை வைக்காததே விபத்துக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்டு உள்ள இடத்தில் சுற்றிலும் தடுப்பு பலகைகள் வைத்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை சார்பில் பேரூர் – சிறுவாணி சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்புக் கம்பிகள் வைத்து திரைசீலைகளை கட்டி உள்ளனர். மேலும் அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
அதோடு, அங்கு சூரிய மின் சக்தியுடன் ஒளிரும் சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு அமைக்கப்பட்டு உள்ள மண் சாலையை தரமாக அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.