கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய மூன்று கட்டிட தொழிலாளிகள் அஸ்திவாரம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த பழமையான ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, கட்டிட தொழிலாளி சிவாஜி என்பவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!
மேலும், படுகாயம் அடைந்த ராஜேந்திரன் என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மாயவன் என்பவரை, 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு சுற்று சுவர் கட்டுவதற்காக குழி தோண்டும்போது பாரம் தாங்காமல் பழைய வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.