தமிழகம்

இன்னும் 7% தான்… திமுக கதை முடிந்தது… ஹெச் ராஜா கணிப்பு!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது, செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார் அவரது உணர்வு எனக்கு புரிகிறது. எப்போதும் ஒற்றுமையே பலம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று இருப்பது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி.

தேசிய ஜனநாயக கூட்டணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு, இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.

போதை பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்காளரும் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். பலவீனப்படுத்துவது எதிர்கால சந்ததிக்கு ஆபத்தாக முடியும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம்.
பக்கத்து வீட்டுக்காரன் பலவீனமானால் நான் பணக்காரன் என்பது போன்ற கண்ணோட்டம் பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் இல்லை. கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்பது முக்கியமல்ல.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக பெற்ற ஓட்டுக்களை 24ம் ஆண்டு தேர்தலில் தக்க வைத்து கொள்ள முடியவில்லை ஏழு எட்டு சதவீதம் சரிந்திருக்கிறது. அதேபோல் இன்னும் ஒரு ஏழு எட்டு சதவீதம் சரிந்தால் முடிந்து போனது கதை என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.