Categories: தமிழகம்

சாதி மோதலை தூண்டுவதாக திமுகவின் தங்கத்தமிழ்செல்வனுக்கு எதிர்ப்பு : ஊர் முழுவதும் கண்டன போஸ்டர் ஒட்டியதால் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல்!!

தேனி : திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வனை கண்டித்து கிராம மக்கள் கண்டன போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மீனாட்சிபுரம் பேரூராட்சி. இங்கு ஒரு சமுதாயத்தினர் 80 சதவீதம் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டு காலமாக இவர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

80 சதவீத மக்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் திமுகவின் கோட்டையாக மீனாட்சிபுரம் பேரூராட்சி இருக்கிறது. இதில் பேபி குருசாமி என்பவர் கடந்த 20 ஆண்டு காலமாக பேரூர் கழகச் செயலாளராக இருந்து வருகிறார்.

தற்போது இவருக்கு எதிராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் 20% வாக்கு வங்கி வைத்துள்ள வேறொரு நபருக்கு பரிந்துரை செய்ததால் சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து சமுதாய கூட்டம் கூட்டி தங்க தமிழ்ச்சவனுக்கு சமுதாய ரீதியான பிரச்சனை உருவாக்க முயற்சிப்பதாக கூறி கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.

அதைத்தொடர்ந்து தங்களது கண்டனத்தை மேலும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தேனி போடி சுற்றுப் பகுதிகளில் முக்கிய இடங்களில் கண்டன போஸ்டர்களையும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சில இடங்களில் தங்கதமிழ்செல்வன் ஆதரவாளர்கள் போஸ்டர்களை கிழித்து எதிர்ப்பாளர்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் மீனாட்சிபுரம் மற்றும் போடி பகுதிகளில் திமுகவினரிடையை கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.