திருப்பூர் : ஆ.ராசா பேச்சை கண்டித்து இந்து முன்னணி சார்பாக அவிநாசியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா மனுஸ்மிருதியில் இந்துக்கள் குறித்து கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து பேசியதை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது.
அந்த வகையில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தரப்பில் கடைகள் அடைக்க வேண்டியதில்லை என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேயூர், தெக்கலூர், தேவராயன்பாளையம், காசிகவுண்டன்புதூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. வினர் கடைகளை திறக்கச் சொல்லி வணிகர்களிடம் அறிவுறுத்தி வந்தனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.