பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்பொழுது, பிரதமர் மோடி ஒடிசாவிலே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தமிழர்களை திருடர்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் தமிழகத்திற்கு வருகை தரும் பொழுது மட்டும் தமிழர்கள், தமிழ், திருவள்ளுவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், என்று பேசுகிறார். ஆனால், அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது.
மேலும் படிக்க: மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!
எனவே தமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக கருப்பு கொடியேந்தி கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் வேங்கை ராஜா, முகமது அலியார், அப்பாஸ் மந்திரி, மொழி போர்த்தியாகி ராமு ராமசாமி, அப்துல் ரகுமான், கார்த்திக், பாரதி, ஜோதி ராமலிங்கம், உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.