கோவை: கோவையில் ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நாளை துவங்குகிறது.
கோவை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், கணவன் அல்லது மனைவி பணிபுரியும் இடத்துக்கு, விருப்ப மாறுதல் பெற்றுச் செல்ல முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நாளை துவங்குகிறது. கணவன்- மனைவி வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் பட்சத்தில், கணவனோ, மனைவியோ யாரேனும் ஒருவர், மற்றொருவர் பணிபுரியும் மாவட்டத்துக்கு மட்டும் மாறுதல் பெற்றுச்செல்ல இயலும்.
மேலும், கணவன்-மனைவி இருவரும் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் அல்லது வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முன்னுரிமையை கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் பயன்படுத்திக் கொண்டாலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இம்முன்னுரிமையை பெற இயலாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்கள், பணிபுரியும் மாவட்டத்துக்குள் பள்ளிகளை தேர்வு செய்ய இயலாது. கலந்தாய்வுக்கு வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ பங்கேற்க இயலாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.