விழுப்புரம் : திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள திருமலைசாமி என்ற திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் கப்பியாம்புலியூர் சேர்ந்து பிரனிதா ஆகியோருக்கு 17.6.2022 வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் Dj நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதல் காரணத்தினால் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் தடி, கம்பி மற்றும் கற்களைக் கொண்டு கடுமையாக பெண் வீட்டாரை தாக்கியதில் பெண் வீட்டைச் சேர்ந்து 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தைக் குறித்து திருமணம் மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு சரியான நேரத்தில் தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு காவல் துறையைச் சார்ந்தவர்கள் யாரும் வரவில்லை.
இரு விட்டார்களுக்கு இடையே சண்டை மோதல் முடிந்த பிறகு சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த காவல்துறையினர் இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சரியான நேரத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் வந்து இருந்தால் இந்த மோதல் தவிர்த்திருக்கலாம் என்று பெண் வீட்டாரின் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பெண் வீட்டாரோ, மாப்பிள்ளை வீட்டாரோ காவல் நிலையத்தில் புகார் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.