கோவை மதுக்கரை பகுதியில் சுமார் 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுக்கரை காவல் நிலைய போலீசார், சீராபாளையம் மற்றும் திருமலையாம் பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : அடிசக்க.. தீபாவளிக்கு 4 நாள் லீவ்.. ஹேப்பி அண்ணாச்சி!
அப்போது, புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த சீராபாளையத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் 209 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருமலையாம் பாளையத்தைச் சேர்ந்த நூர்முஹம்மத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இவ்வாறு மொத்தம் சுமார் 329 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.