மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் ராயல் என்பீல்ட் பைக்கை பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். அதேபோல், பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அண்ணாதுரை. இவர் ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, எஸ்ஐ அண்ணாதுரை சீனிவாசனின் ஒர்க் ஷாப்பில் பைக்கை சர்வீஸுக்கு விடுவதும், அதற்கு பணம் கொடுக்காமல் பைக்கை எடுத்துக் கொண்டு வருவதும் வாடிக்கையாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நிலுவைத் தொகையே 8,600 ரூபாயாக உள்ளதாக சீனிவாசன் கூறுகிறார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சக காவலரைக் கொண்டு ராயல் என்பீல்டு பைக்கை ஒர்க் ஷாப்பில் விடுமாறு கூறியுள்ளார். இதன்படி அந்த காவலரும் சீனிவாசன் நடத்திவரும் கடைக்கு வந்து வாகனத்தை விட்டுள்ளார். அப்போது பழைய பாக்கியே அதிகமாக இருக்கிறது என்றும், அதனை கொடுத்துவிட்டு இதற்கு பழுது பார்க்கலாம் எனவும் சீனிவாசன் கேட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல் அண்ணாதுரைக்குச் சென்றபின், எஸ்ஐ அண்ணாதுரை போன் மூலம் அழைத்து சீனிவாசனை மிரட்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த அண்ணாதுரை, சீனிவாசனின் கடைக்கு வந்து அவரை அடித்து காரில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: திடீர் பயம் காட்டும் HMPV வைரஸ்.. அறிகுறிகள் என்னென்ன? உண்மையில் உலகத்தொற்றா இது?
தற்போது இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய இடத்திற்கு சீனிவாசன் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அதேநேரம், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உன்னை சிறையில் அடைத்து விடுவேன் என எஸ்ஐ அண்ணாதுரை மிரட்டியதாகவும், சீனிவாசன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.