பழனி முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகை நாளில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலை மீது சென்று வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை வழியாகவும் மலை மீது சென்று வருகின்றனர்.
மேலும், வின்ச் மற்றும் ரோப் கார் மூலமாக பக்தர்கள் மலை மீது செல்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். மலை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் செல்வதால் கட்டண தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் ஒரு மணி நேரமும், பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் இரண்டு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கூட்ட நெரிசலைத் தவிர்த்து விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.