பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ரவியை கண்டிக்கும் விதமாகவும் மத்திய அமைச்சர்கள் மேல் உள்ள வழக்குகள் குறித்தும் விபரங்கள் அடங்கிய போஸ்டர்களை பழனி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ராஜ் பவன் ஆர்.என் ரவியே எங்கள் அமைச்சரே நீக்க நீ யார்..? என்று ஒருமையிலும் , டெல்லிக்கு செல் இவர்களை மந்திரி பதிவிலிருந்து உடனடியாக நீக்கம் செய்ய சொல் என்றும், மத்திய அமைச்சர்கள் ஸ்ரீநிதி பிரமாணிக் மீது 11 வழக்குகளும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜான் பார்லர் மீது 9 வழக்குகளும் வெளியுறத்துறை மத்திய அமைச்சர் முரளிதரன் மீது ஏழு வழக்குகளும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மீது ஆறு வழக்குகளும் உள்ளது.
நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மீது ஐந்து வழக்குகளும், சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகேல் மீது ஐந்து வழக்குகளும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, உணவு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே மீது மூன்று வழக்குகளும், உள்துறை இணையமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மீது ஒரு வழக்குகளும் உள்ளது என்று பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய மத்திய அமைச்சர்கள் அடங்கிய போஸ்டர்கள் பழனி பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் வளாகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.