பழனி நகரில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்களை கிழித்த பா.ஜக நபரை கைது செய்யக்கோரி திமுகவினர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செப்டம்பர் 17 வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து பழனியில் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், மின்வாரியம் அருகில் உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் பேனர் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு பாஜகவை சேர்ந்த மதுரை வீரன் என்பவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனி நகர் காவல் நிலையத்தில் திமுகவினர் 50 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
பின்னர் பேசிய நகர செயலாளர் வேலுமணி புகார் அளிக்கபட்ட பா.ஜ.கவை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக தலைவர் அண்ணாமலையை ஊருக்குள் நுழைய விட மாட்டோம் எனவும், மீறி வந்தால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.