திண்டுக்கல் : பழனியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி- சவரிக்காடு பகுதியில் உள்ள வீட்டில் யானையின் தந்ததங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பழனி வனத்துறை அதிகாரி பழனிகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அடி நீளமுள்ள தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சவரிக்காடு சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாச்சலூர் மற்றும் அமரபூண்டி சேர்ந்த ராஜ் ,முத்துவேல், சிவலிங்கம், ராஜேஷ் பிரபு ஆகியோர் வனப்பகுதியில் கிடந்த யானையின் தந்தத்தை சில நாட்களுக்கு முன் எடுத்து வந்துள்ளனர். பின்னர், நண்பர்களின் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.