பழனியருகே சிறுமியை கேலி செய்த இளைஞர்களை கண்டித்ததால் ஆவேசமடைந்த இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியதில் பத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நரிக்குறவர் குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் 13 வயது சிறுமியை, அதே பகுதியில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேலி செய்ததாக தெரிகிறது.
கேலி செய்த இளைஞர்களை, சிறுமியின் உறவினர்கள் சிலர் கண்டித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால், ஆவேசமடைந்த இளைஞர்கள் கண்மூடித்தனமாக கற்களை எடுத்து வீசியதில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என பத்திற்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்தது. மேலும் சிலரின் முகங்களில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து காயமடைந்த அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த பழனி தாலுகா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் ஆடைகள் களையப்பட்டு கொடூரமாக கொலை செய்தவர்களை போலீசார் தேடிவரும் நிலையில், தற்போது 13வயது சிறுமியை இளைஞர்கள் கேலி செய்ததும், அதை கண்டித்தவர்கள் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.