மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாக்கடைகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. இந்த நிலையில், புது ஆயக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய வீட்டிற்கு முன்பாக மழை நீர் தேங்கியுள்ளது.
மழை நீரை அகற்ற கோரிக்கை விடும் நபர்கள் மாற்றுத்திறனாளி இளைஞர்களை கொடுமைப்படுத்தும் வகையில் தண்ணீரில் தள்ளி விட்டுள்ளனர். இதனால், செய்வது அறியாத தவித்த மாற்றுத்திறனாளி இளைஞர்கள், தண்ணீரிலிருந்து எழுந்து அருகே உள்ள வீட்டிற்குள் செல்லக்கூடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
மாற்றுத்திறனாளிகளை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.