பழனி எம்.எல்.ஏ கலந்து கொண்ட கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்த போது தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த காட்சி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியின் வளாகத்தில் பல்வேறு கட்டிடங்கள் 4 கோடி மதிப்பில் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் கலந்து கொண்டார்.
பின்னர் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து மாணவிகள் பாடினர். அதனை தொடர்ந்து மாணவிகளுடன் சட்டமன்ற உறுப்பினர், ஆசிரியர்கள், கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, நகராட்சி ஆணையர் பாலமுருகன் நாட்டுப்பண்-ஐ மதிக்காமல் அலட்சியத்துடன் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தார்.
பழனி நகராட்சி ஆணையரே தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது தொலைபேசியில் பேசி கொண்டு இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.