பழனி முருகன் கோவிலில் பெண்ணை கோவில் ஊழியர் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த போது, திருக்கோவில் ஊழியர்கள் தனது மகளைத் தொட்டு தள்ளினார்கள் என ஈரோட்டு மாவட்டம் சித்தோடை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் ஆடியா வெளியிட்டார்.
கடந்த 9ம் தேதி சாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த போது, தன்னுடைய மகளை தொட்டு தள்ளினார்கள் என குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இதில், கடந்த 9ம் தேதி மாலை 6.39 மணியளவில் கருவறையில் உள்ள மூலவரை சாமி தரிசனம் செய்ய சம்பந்தப்பட்ட அந்த குடும்பத்தினர் வந்தபோது, கருவறையை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுப்பதும், அதை திருக்கோவில் ஊழியர் சிவா என்பவர் தடுத்து எச்சரித்தும் தெளிவாக தெரிகிறது.
ஆனால் இந்த உண்மையை மறைத்து பெண்ணின் தந்தை தவறான செய்தியை பரப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பழனி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அடிக்கடி மூலவரை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விடுவதால் இதுபோல் பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக பழனி கோவில் நிர்வாகம் ஏற்கனவே பக்தர்களிடம் செல்போனை வாங்கி வைக்க ஏற்பாடுகளை செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் வைத்திருந்தது. இதனால் திருப்பதியை போல் செல்போனை அனுமதி மறுக்கபட வேண்டும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.