பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன கலைச்செல்வன் (27), கோபிநாதன் (28), அமீர் பாட்சா (26), அகமது அப்துல்லா (28), கோயல் நிஷாந்த் (26) ஐந்து பேரும், கேரளா மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
பழனி அருகே சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபிநாதன் மற்றும் கலைச்செல்வன் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.