பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் ஆன கலைச்செல்வன் (27), கோபிநாதன் (28), அமீர் பாட்சா (26), அகமது அப்துல்லா (28), கோயல் நிஷாந்த் (26) ஐந்து பேரும், கேரளா மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
பழனி அருகே சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபிநாதன் மற்றும் கலைச்செல்வன் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்த இருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.