பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமிதரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன.
இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் நிறுத்தபடுகிறது. இதன்படி கும்பாபிசேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் நிறுத்தப்படும் என பழனி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
மேலும் பராமரிப்பு பணியின் பொழுது ரோப்காரில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் வர்ணம் பூசபட்டும் ,பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு நாளை மீண்டும் செயல்படும் என தெரிவித்துள்ளது.
எனவே, இன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில்களில் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.