பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் பழனியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விசாகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தின் போது ஜனவரி 27ஆம் தேதி காலை 8 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படும பக்தர்கள் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் மலை கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2000 பேரும் படிவழிப்பாதை வழியாக 4ஆயிரம் பேர் என மொத்தம் 6ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்வு வருகிற 23ம்தேதி நடைபெறவுள்ளதை அடுத்து வருகிற 23ம்தேதி முதல் 27ம்தேதி கும்பாபிஷேகம் நிறைவு அடையும் வரை மூலவர் தரிசனம் கிடையாது என்றும், அன்றுமுதல் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளதை பக்த்ரகள் தரிசனம் செய்ய முடியும் என்றும் திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் பேருந்துகள் பழனி-தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமலக்கப்படும் என்றும், பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும் என்றும், அங்கிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் பழனி நகருக்குள் வந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1500 வாகனங்கள் வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றங்களை குறைப்பதற்காக நகர் முழுவதும் 266 கண்காணிப்பு காமிராக்களும், வைஃபை வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்ட எல்.இ.டி திரை பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் ஆகிய வசதிகள் தடையின்றி ஏற்பாடுகள் செய்யவும், பக்தர்கள் வரும் பாதையில் நடைபெறும் சாலைப் பணிகள், சாக்கடை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடமுழுக்கு நடைபெறும் மூன்று நாட்களுக்கு பழனி மலை கோவிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதானத் திட்டம் பழனி அடிவாரம் பகுதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பழனி கோவில் இணையான நடராஜன், பணித்துறை மின்சார துறை போக்குவரத்து துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.