கோவை : ஓடிடி தளங்களும் வரவேற்கத்தக்க ஒன்று தான் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி யின் நடிப்பில் ஊர்வசி, சத்தியராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கோவை புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படம் திரையிடப்படுள்ளது.
இந்நிலையில் புரூக் பீல்டு மாலில் இத்திரைப்படத்தினை பார்த்த பொதுமக்களை படத்தின் கதாநாயகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி மற்றுமொரு இயக்குனரான சரவணன் ஆகியோர் சந்தித்து படத்தை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் பொதுமக்களுடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.மேலும் அதில் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அமுதா என்பவர் நாட்டாமை படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் வந்துள்ளதாக தெரிவித்தார். அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், அவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வந்து அருகில் அமரவைத்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.ஜே.பாலாஜி நான் கோவையில் தான் ஆர்ஜே வேலையை துவங்கியதாக மகிழ்ச்சியுடம் தெரிவித்தார்.
300 கொலைகள், 500 கத்திக்குத்துகள் அவ்வாறெல்லாம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கின்ற சாத்வீகமான படம் என தெரிவித்தார். மேலும் பல்வேறு மக்கள் ஹிந்தி படத்தை காட்டிலும் மிக நன்றாக உள்ளதாக தெரிவித்தாகவும் கூறினார்.
மேலும் நானே நினைத்தாலும் வில்லன் கதாப்பாத்திரம் எழுத தெரியாது எனவும் அது வராது எனவும் கூறிய அவர், குழந்தைகள் எனது படத்திற்கு வருவதால் கொலை செய்வது போதை பொருட்கள் விற்பது போன்று நடிப்பதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார்.
மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்து தான் இது போன்று குடும்ப படத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்.ஆர்.ஆர், ஜேஜிஎப் போன்ற படங்கள் வருவதால் இது போன்ற படத்திற்கு மக்கள் விருப்பம் காட்ட் மாட்டோர்களோ என்ற பயம் இருந்ததாகவும் தற்போது அந்த பயம் இல்லை எனவும் தெரிவித்தார்.
PAN இந்தியா படங்களும் ஓட வேண்டும் இது போன்ற படங்களும் ஓட வேண்டும் எனவும் தெரிவித்தார். PAN இந்தியா படம் விருந்து பந்தியில் வைக்கும் குலோப் ஜாமூன் என்றால் இப்படத்தை பந்தியில் வைக்கும் மாங்காய் ஊருகாய் போல் பார்ப்பதாக கூறினார்.
தனது படிப்பு மற்றும் வேலையை சென்னையில் இருந்து வந்து கோவையில் துவங்கும் போது இருந்த தயக்கம் இருந்ததாகவும் ஆனால் கோவையை விட்டு போகும் போது மனவருத்தம் இருந்ததாகவும் கூறினார்.
திரைப்படத்திற்கு ஓடிடி வந்ததும் நல்லது தான் எனவும் தெரிவித்தார். சினிமா வில் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைக்காததால் நாமே இப்படத்தை எடுக்கலாம் என எடுத்ததாக தெரிவித்தார்.
இதில் பேசிய மற்றொரு இயக்குநர் சரவணன் இது போன்ற படம் இளைஞர்களுக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், அந்தந்த படத்திற்கு யார் ஏற்ற நடிகர் நடிகையோ அவர்களை தான் தேர்ந்தெடுக்க முடியும் என தெரிவித்தார்.
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
This website uses cookies.