திருப்பத்தூர் அருகே, ஊராட்சி துணைத் தலைவரின் வீடு புகுந்து வெட்டிய கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அடுத்த கோ.புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (50). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், திமுக துணைத் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி வசந்தி (40). இந்த நிலையில், தம்பதி நேற்று வீட்டிலிருந்துள்ளனர்.
அப்போது, வீட்டின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனால் இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர், இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வீட்டிலேயே வசந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதேநேரம், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளதாகவும், இரண்டு நாட்களாக இதற்கு பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’எங்க மக்கள மதிச்சு சந்திக்கனும்ல’.. மாஞ்சோலை மக்கள் ஸ்டாலின் மீது அதிருப்தி!
மேலும், இந்த நிலத்தில் இருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில், இன்று அந்த வழிக்கான பதிவு நடக்கவிருந்த நிலையில், மர்ம நபர்களால் திருப்பதி மற்றும் அவருடைய மனைவியை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நிலப் பிரச்சனை தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.