தமிழகம்

பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!

ருத்ர தாண்டவம் ஆடிய ரிஷப் பந்த்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் 5-வது போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.

இன்றைய நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்த நட்ச்சத்திர பும்ராவுக்கு திடீர் உடல்நிலை பிரச்சனை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அவரது உடல்நிலை குறித்த தகவல் தெரியாத நிலையில்,இந்திய அணி பேட்டிங் ஆட களத்திற்கு வந்தது,அப்போது அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால்,ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.இதனால் இந்திய அணி இந்த இன்னிங்சில் வலுவான இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆஸி.வீரர் போலந்தின் அபார பந்து வீச்சில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

விராட் கோலி இந்த முறையும் ஜொலிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.அதன் பின்பு களத்திற்கு வந்த ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் நிறைய பந்துகளை தன்னுடைய உடம்பில் வாங்கி காயம் அடைந்து போராடி 40 ரன்களை அடித்தார்,அதற்கு நேர்எதிராக இந்த தடவை முதல் பந்தை சிக்ஸர்க்கு அடித்து நான் பழைய மாதிரி திரும்ப வந்துட்டேன் டா என்று தன்னுடைய பேட்டால் பதில் அளித்தார்.

இதையும் படியுங்க: பும்ராவுக்கு திடீர் காயம்… தடுமாறும் இந்திய அணி…உலககோப்பை கனவு கேள்விக் குறியா..?

அதன் பின்பு அவர் ஆடிய ஒவ்வொரு பந்தும் மைதானத்தில் நாலா புறமுமும் பறந்து சென்றது,ஆஸ்திரேலியா வீரர்கள் என்ன செய்வதுனு தெரியாமல் T-20 பீல்டிங் செட்டப் செய்தார்.அப்போதும் பந்த் ருத்ர தாண்டவம் ஆடி மைதானத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அவர் எல்லா பந்துகளையும் அடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.இதனால் பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் ஆட்டத்தை அவர்கள் பக்கம் மறுபடியும் இழுத்து பிடித்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 2ஆம் நாள் ஆட முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.நாளைய நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு ரன்களை இலக்காக கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mariselvan

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

7 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

7 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

8 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

8 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

8 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

9 hours ago

This website uses cookies.