தமிழகம்

கீழ் வீட்டில் இருந்தும் கவனிக்க முடியவில்லையா..? மயிலாடுதுறையில் இறுக்கமானதா உதிர உறவு?

மயிலாடுதுறையில், தங்களைக் கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை முயற்சி எடுத்த கணவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த நீடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் (69) – செந்தாமரை (59) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளங்கோவன், ஹோமியோபதி மருத்துவராக இருந்தவர். மேலும், திராவிடர் கழகத்திலும் பொறுப்பில் இருந்துள்ளார்.

அதேநேரம், மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல், வீட்டின் கீழ்பகுதியில் மகன் தன் மனைவியுடன் தனியாகவும், மாடியில் இளங்கோவனும், செந்தாமரையும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளங்கோவனும், செந்தாமரையும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில வருடங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால், மகனும், மருமகளும் அவர்களைக் கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை இளங்கோவன் வீட்டிலிருந்து பெரிய சத்தம் கேட்டுள்ளது.

இதனால் வீட்டின் ஒரு பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும், மாடிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்களுடன், அருகில் இருந்தவர்களும் தீயை அணைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது, உடல் எரிந்த நிலையில் செந்தாமரை இறந்து கிடந்துள்ளார். அவரது மடியில் தலைவைத்தபடியே தீக்காயங்களுடன் இளங்கோவனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரை தூக்கச் சென்றவர்களிடம், `என் மனைவி செத்துப் போயிட்டாள், நானும் செத்துப்போறேன், என்னை பொழைக்க வைக்காதீங்க, இங்கேயே போட்டுடுங்க’ எனக் கதறியிருக்கிறார்.

இதையும் படிங்க: யாரு இவுங்க.. இங்கயே நிக்குறாங்க.. தட்டித்தூக்கிய பொதுமக்கள்.. பாராட்டிய போலீசார்!

இதனைத் தொடர்ந்து, உடனே அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், 90 சதவீதம் உடல் தீயில் எரிந்த நிலையில், அபாயக் கட்டத்தில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், “எங்களை யாரும் கவனிக்கவில்லை. நோயுடன் அவதிப்பட்டதைவிட யாரும் அக்கறை காட்டாததே எங்களுக்கு துயரத்தையும், வலியையும் தந்தது. எனவே, தற்கொலை செய்து கொள்வதற்காக சிலிண்டரை வெடிக்க வைத்தோம்” என இளங்கோவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

9 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

9 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

10 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

10 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

11 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

11 hours ago

This website uses cookies.