தமிழகம்

கலப்பு திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற பெற்றோர்.. கோவையில் பகீர் சம்பவம்..!!

கோவை மாவட்டம், சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா(22) என்பவரும், அல்லி நகரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டர் புதூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சரண்யாவின் தந்தை ஆனந்தன், தாயார் லதா, அவரது அண்ணன் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள், பிரகாஷின் நண்பர் உள்ளிட்ட 7 பேர் கலப்பு திருமணம் செய்த ஜோடி தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

பின்பு தங்களது மகளை சமாதானம் கூறி அழைத்துள்ளனர். அதற்கு அந்தப் பெண் சம்மதிக்க மறுக்கவே ஒரு கட்டத்தில் அவரை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அந்த பெண் உடனடியாக வீட்டிற்குள் சென்று தாளிட்டுள்ளார். அப்போது 7 பேரும் சேர்ந்து வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற சூலூர் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கிருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.