மகனுக்கு புத்துயிர் கொடுத்த பெற்றோர்கள்.. உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதை செலுத்தி ஆட்சியர் நெகிழ்ச்சி!
விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதி அருகே செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அன்று வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் பரத்(16) என்பவர் அடுக்கம்பாறை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில் பரத் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் பரத்தின் பெற்றோர்களான சிவப்பிரகாசம், சித்ரா ஆகியோர் தாமாக முன்வந்து மூளைச்சாவு அடைந்துள்ள தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த பரத்தின் உடலில் இருந்து வடபழனி காவேரி மருத்துவமனைக்கு (லங்ஸ்), அயனம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு (லிவர்) ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு இடது (கிட்னி) போளூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வலது (கிட்னி) என உடல் உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது
விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.