சீமானை சந்தித்த பசுபதி பாண்டியனின் மகள்… அரசியல் களத்தில் புதிய ட்விஸ்ட்!!!
மறைந்த தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் மகள் சந்தன பிரியா, நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த திடீர் சந்திப்பின் மூலம் பசுபதி பாண்டியன் மகன் சந்தனப் பிரியா வரக் கூடிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறாரா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
ஜனவரி 10ஆம் தேதி அன்று நடைபெறும் பசுபதி பாண்டியனின் குருபூஜை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவே சீமானை சந்தனப் பிரியா சந்தித்து பேசியதாகவும் மற்றபடி வேறு எந்த அரசியலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்திலும் பசுபதி பாண்டியன் மகள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இதன் மூலம் பொதுவாழ்வில் ஈடுபட அவர் தீவிரம் காட்டுவது தெரிய வருகிறது.
பசுபதி பாண்டியன் நினைவு தினமான ஜனவரி 10ஆம் தேதி அன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோர் மது அருந்தி விட்டு வரக்கூடாது எனப் பேசியதன் மூலம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருந்தார் சந்தனப் பிரியா.
தென் மாவட்டங்கள் முழுவதும் ஏற்கனவே சுற்றுப்பயணம் சென்ற இவர், தனது தந்தையின் குருபூஜை நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுத்து வருகிறார்.
ஜனவரி 10 ஆம் தேதி அன்று பசுபதி பாண்டியனின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தலைமையில் 10 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 20 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 60 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.