கோவை : கோவை ரெயில் நிலையத்தில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சவுமியா பர்வீன். இவர் கோவை ரெயில் நிலையத்திற்கு டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தனது செல்போனை ரெயில் நிலையத்திலேயே விட்டு சென்றார்.
பின்னர் அங்கு ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார் அந்த செல்போனை மீட்டு அங்கிருந்த பயணிகளிடம் அந்த செல்போனில் குறித்து கேட்டனர்.
அதற்கு அங்கிருந்தவர்கள் இந்த செல்போன் தங்களுடைய இல்லை என்றனர். உடனே போலீசார் அந்த செல்போனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர் சிறிது நேரம் கழித்து அந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய சவுமியா பர்வீன் அந்த செல்போன் தன்னுடைய எனவும், எங்கு தொலைத்தேன் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அதற்கு போலீசார் கோவை ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும் வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தெரிவித்தனர்.
இதையடுத்து சவுமியா பர்வீன் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி செல்போனை திருப்பி ஒப்படைத்தார். சவுமியா பர்வீன் செல்போனை மீட்டு வைத்திருந்த போலீஸ் ரம்யாவிற்கு நன்றி தெரிவித்து போலீசாரை பாராட்டி சென்றார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.