விமான நிலையத்திற்கு பரிசோதனை செய்த போது கொரோனா அறிகுறியுடன் வந்த 2 பயணிகளை- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று காரணமாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் பரிசோதனை செய்த பின்பு வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்தது பயணிகளின் அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்ட போது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் இருந்ததை கண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் பயணி ஒருவரும் தமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை கண்ட மருத்துவ குழுவினர் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.