Categories: தமிழகம்

கடலில் விழுந்த மூவர் மீட்பு,ஒருவர் மாயம்-பதட்டத்தில் பட்டுக்கோட்டை மீனவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் நொண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி, விஜயராகவன் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடலில் காற்று அதிகமாக இருந்ததன் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஆரோக்கியம், பழனிசாமி, விஜயராகவன் ஆகிய மூன்று மீனவர்கள் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்தோணி நிலை என்னவென்று தெரியாமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தனது சகோதரியின் கணவர் அந்தோணியின் நிலை என்ன என்று தெரியாமலும் தனது சகோதரி மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து 5 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்தோணியின் மைத்துனர் 28 வயதுடைய வேதேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இறந்த வேதேஸ்வரன் உடல் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.காணாமல் போன மீனவர் அந்தோணியை கண்டுபிடித்து தர வேண்டும் என அந்தோணி மனைவி மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கடலுக்குச் சென்ற மற்றொருவர் நிலை என்ன என்று தெரியாமல் நொண்டி தோப்பு பகுதியில் உள்ள மீனவர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Sangavi D

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 minutes ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

2 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

2 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

3 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

3 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

4 hours ago

This website uses cookies.