தமிழகம்

எங்க ஓடவா பார்க்க.. டிரோன் மூலம் விரட்டிய கிராம மக்கள்.. செங்கல்பட்டில் மிரட்டிய சம்பவம்!

செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே திருட முயன்ற நபர்களை டிரோன் மூலம் கிராம மக்கள் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது, அவரது இளைய மகன் சூர்யா, தன்னுடைய நிலத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

இதன்படி, இருசக்கர வாகனத்தின் அருகில் ஒருவர் சூர்யாவின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்துள்ளார். மேலும் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்த சூர்யா, கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால், அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் இருவர் தண்ணீர் நிறைந்த வயல்வெளிக்குள் ஓட்டம் பிடித்து உள்ளனர். மற்றொருவர் உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார். இதனிடையே, இது குறித்து ஊர் மக்களிடம் சூர்யா கூறியுள்ளார். இதன்படி, டிரோன் கேமரா மூலம் ஏரிப் பகுதியில் இருவரை தேடி உள்ளனர்.

இதனையடுத்து, ஏரியின் நடுவே நீந்திக் கொண்டிருந்த இருவரை பொதுமக்களில் சிலர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்படி சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதையும் படிங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!

இந்த விசாரணையில், இவர்கள் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் சஞ்சய் என்ற இளைஞர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடி தலைமறைவாக உள்ள மற்றொருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

10 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

11 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

12 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

13 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

13 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

13 hours ago

This website uses cookies.