கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு இருக்கும் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய் முறையாக பதிக்கப்படாததால் சாலையில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பாக பெரிய அளவில் குழியும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவை மாவட்டத்தில் எந்த பணிகளையும் தமிழக அரசு முறையாக செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டிவருவது. மாநகராட்சியின் இந்த அலட்சியத்தால் கோவை சுகுனாபுரம் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு இருப்பதால் வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் வீனாகி வருகிறது. இதுவரை கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.