சென்னை அயப்பாக்கம் அருகே கடந்த ஒரு வாரமாக அயப்பாக்கம் – திருவேற்காடு சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர், அபர்ணா நகரில் விட்டு விட்டு மின் விநியோகம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு மட்டும் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான அப்பகதி மக்கள், மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து வந்த ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயில் காவல்துறையினர் மக்களை சமாதானம் செய்தனர். ஆனால் தொலைபேசியில் அழைத்தும், நேரில் சந்திக்க வராத மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 மணி நேரமாக போராட்டம் நடந்ததால் அப்பகுதிக்கு வந்த ஆவடி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் பொதுமக்களை சமாதானம் செய்தார்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து : அலறிய பயணிகள்..!!
அப்பகுதி மக்களிடம் பேசிய போது, அறிவிக்கப்படாத மின்வெட்டில் அவதிப்படுவதாகவும், தொடர்ந்து 2 மணி நேரம் மின்வெட்டு காரணமாக போராட்டத்தில் இறங்கியதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமப்படுவதாகவும், பணி நேரம் முடிந்து வீட்டுக்கு வந்தால் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.