தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதலே தண்ணீர் தட்டுப்பாடு துவங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குடிநீர் தட்டுப்பாடு என்பது அதிகமாகவே நிலவி வருகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்க ஆங்காங்கே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை புலியகுளம் பகுதியில் குடிநீர் சரிவர வராததால் பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோவில் முன்பு ஒன்று கூடினர்.
காலி குடங்களுடன் ஒன்று கூடிய 20 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த இராமநாதபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதேபோல் கடந்த வாரம் குனியமுத்தூர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் குடித்தண்ணீர்காக தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.