கோவை : கோவையில் சாலையோர வசிக்கும் முதியவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில் அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த சக்தி ரோடு குரும்பபாளையத்தில் உள்ள புளிய மரத்தின் கீழே 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். முதியவருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் உணவளித்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகளுக்கு பாதுகாவலனாக இந்த முதியவர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று காலை மரத்தின் கீழ் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றிணைந்து முதியவரை அடக்கம் செய்ய முடிவெடுத்து அவருக்கு மாலை இட்டு மரியாதை செலுத்தி சம்பரதாயம் முறைப்படி அடக்கம் செய்தனர்.
சாலையில் யாரேனும் கீழே விழுந்து கிடந்தாலும் யாரும் உதவி செய்யாத இந்த காலகட்டத்தில் ஊர் மக்களே ஒன்றிணைந்து சாலையோர முதியவரை அடக்கம் செய்தது கோவை மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.