திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி ஏ.டி காலணியில் காளியம்மன், பட்டாளம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று இரவு கோவில் அருகே உள்ள நாடக மேடையில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்க: மீண்டும் ஓசி சர்ச்சை.. எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும், திமிரும்.. அண்ணாமலை கண்டனம்!
ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்க்க அம்மாபட்டி மற்றும் கொடிக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிராம மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கிராம மக்களை இளைஞர்கள் தகாத வார்த்தையால் பேசியதால் கிராம மக்களுக்கும் இளைஞர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேடசந்தூர் போலீசார் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு மீண்டும் பூத்தாம்பட்டி சென்று அங்கு இருந்த கிராம மக்களை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு இருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இளைஞர்கள் கொடூரமாக தாக்கியதில் பூத்தாம்பட்டியை சேர்ந்த பாண்டியன், வேல்முருகன், ரத்தீஷ்வர்மா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வேடசந்தூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த வேல்முருகன் மற்றும் முத்துச்சாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் அசம்பாவீதம் ஏற்படாமல் தடுக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் இளைஞர்கள் ஊர் மக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.