Categories: தமிழகம்

வீடுகளை ஒதுக்குவதில் முறைகேடு ; திருச்சியில் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!

திருச்சி : வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குலுக்கள் முறையில் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்குவதற்கான தேர்வு திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு முறையான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமலும், குறிப்பாக, கல் மந்தை பகுதியில் வசித்து வந்த சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பூலோகநாதர் கோவில், சந்து கடை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முற்றுகை போராட்டம் குறித்து பாதிக்கப்பட்ட பயனாளி பெண் கூறுகையில்:- திருச்சி கல்மந்தை பகுதியில் காலங்காலமாக குடியிருந்து வருகிறோம். இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் கூலி தொழில் மற்றும் துப்புரவு பணி செய்பவர்கள் அதிகம் உள்ளனர்.

தற்போது கல் மந்தை குடிசை மாற்று வாரியத்தில் ஒடுக்கப்பட்டுள்ள வீடுகளில் முறையான அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படாமல், மற்ற ஏரியாவை சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் வழங்கப்பட உள்ளதை கண்டித்து இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக முதலமைச்சரும், திருச்சி மாவட்ட கலெக்டரும் தலையிட்டு முறையாக பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க உதவி செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

15 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.