பொறுமையை இழந்த பொதுமக்கள்.. தண்டவாளத்தில் இறங்கி மறியல் : 500 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!!
சிவகங்கை மாவட்டத்தில் , சிவகங்கையில் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலான முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்வதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகாரளித்து வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
குறிப்பாகா சிவகங்கையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கோட்டை வரும் விரைவு ரயில் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இதற்கு அரசு நடவடைக்காததை குறிப்பிட்டு, இன்று சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். மேலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், சிவகங்கை ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர்களை காவல்துறையினர் அதிரடியாய் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.