Categories: தமிழகம்

LODGE-க்காக கோவிலை இடிக்கிறதா?.. சிவன் கோவிலை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சி..!

கோவை கோல்ட் விங்ஸ் பகுதியில் இயங்கி வரும் தனியார் லாட்ஜை விற்பனை செய்வதற்காக அங்குள்ள சிவன் கோவிலை கோவை மாநகராட்சி மேயர் இடிக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து பேசிய செல்வகுமார், அந்தப் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் எனவும், அந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள ஐஸ்வர்யா லாட்ஜ் மாநகராட்சியில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அங்கு சட்டவிரோதமாக பல்வேறு விஷயங்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

அதன் மாடியில் பார் இயங்கி வருவதாக தெரிவித்த அவர் அப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த லாட்ஜின் நிறுவனர் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் அந்த லாட்ஜின் வாகன வசதிக்காக இந்த கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும், இதற்கு முன்பிருந்த கோவை மேயர் கல்பனா ஆனந்த குமாரும் இந்த கோவிலை இடிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தற்பொழுது உள்ள புதிய மேயரும் கோவிலை இடிப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். கோவை மாநகராட்சியில், பல்வேறு குறைகள் இருக்கின்ற பொழுது கோவிலை இடிப்பதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். நீலாம்பூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு மாணவர்களிடம் போதை பொருட்கள் கைப்பற்றியதை குறிப்பிட்ட அவர் இங்கும் மாணவர்கள் எவ்வித கட்டுப்படுமின்றி தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

திமுகவும் கோவை மேயரும் கோவிலை இடிப்பதில் அக்கரை காட்டாமல் குறைகளை சரி செய்யுங்கள் எனவும் நிர்வாகம் செய்யுங்கள் எனவும் கூறினார். மேலும், இவ்விவகாரத்தில் பாஜக பொதுமக்களை திரட்டி போராடும் எனவும் தெரிவித்தார். அந்த லாட்ஜுக்கு குறித்து ஆர்டிஐ செய்து பார்த்த பொழுது அனுமதி அளித்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சியிடம் இல்லை என்று தான் பதில் தருவதாக குறிப்பிட்டார்.

இந்த மேயர் பதவிக்கு வந்து ஒரு மாத காலம் தான் ஆகிறது என்பதை சுட்டிக்காட்டிய அவர் அதற்குள் கோவிலை இடிக்க வேண்டிய அவசரம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர் மாநகராட்சி மேயர் அப்பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த லாட்ஜை விற்றுக் கொடுத்தால் கமிஷன் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவே கோவிலை இடிக்க முயற்சிப்பதாகவும் கூறினார். இது குறித்து இவர்கள் அளித்துள்ள மனுவில் லாட்ஜ் இருப்பது மட்டுமே குறிப்பிட்டுள்ள நிலையில், அது தவிர அப்பகுதியில் கோவில் இருப்பதையோ மேயரின் தலையிட்டையோ கோவிலை இடிக்க முயற்சிப்பதையோ குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.