திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி (வயது 60) இவர் பாஜக கிளை தலைவராக உள்ளார்.
இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினருடன் கல்யாணி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது நள்ளிரவில் சுமார் ஒரு மணி அளவில் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் வீட்டின் முன்புற பகுதியில் ஜன்னல், மின்சாதன பெட்டி பகுதியில் தீப்பிடித்து எரிந்தது, உடனடியாக வீட்டின் வெளியே வந்த கல்யாணி தீயை அணைத்தார்.
இதுகுறித்து கல்யாணி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் சம்பவ இடத்திற்கு நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பெட்ரோல் கொண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.