சென்னை : சென்னையில் ஓட்டல் முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 26 ம் தேதி சென்னை சாலிகிராமம், கங்கப்பா தெருவிலுள்ள M.R.M. ரெசிடென்சி என்ற ஹோட்டல் முன்புற கதவு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிச் சென்றதில், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் கதவு மீது பட்டு வெடித்து சிதறி, கண்ணாடி கதவு உடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
இது தொடர்பாக மேற்படி ஹோட்டல் உரிமையாளர் தமீம் அன்சாரி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொளுத்தி வீசியது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் (எ) வினோத்குமார் என்ற நபரை கைது செய்தனர்.
விசாரணையில், எதிரி வினோத்குமாருக்கும், ஹோட்டல் நிர்வாகத்திற்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக, வினோத்குமார் அவரது கூட்டாளி கலை (எ) கலைச்செல்வன் என்பவருடன் சேர்ந்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் எதிரி வினோத்குமார் மீது T-4 மதுரவாயல் மற்றும் S-15 சேலையூர் காவல் நிலையங்களில் தலா 1 கொலை வழக்கு என 2 கொலை வழக்குகள் உள்பட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே பல தடவை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி வினோத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தலைமறைவாக உள்ள கலை (எ) கலையரசனை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.