ரூ. 2000 நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந் திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு கள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.,30 ஆம் தேதி வரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும், வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்ப தால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் தனது இருசச்கர வாகனத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 2 ஆயிரம் ரூபாயை காட்டி , 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஊழியரும் பெட்ரோல் நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபா ய்த் தாளை வாங்கி பெட் ரோல் பங்கு சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது எனக் கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு பெட்ரோல் நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் பெண் சூப்பர்வைசர் கூறியதின் படி, ஊழியர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் உறிஞ்சு குழாயை எடுத்து வந்து பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்துவிட்டார்.
பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அங்கு இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
This website uses cookies.