தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக மாற்றம் செய்ய வேண்டும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பெற்றோர்கள் வலியுறுத்தல்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பது மற்றும் மேலாண்மை குழுவின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைப்பது பற்றிய கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக்குழு அதன் நடவடிக்கைகள் என்ன அது எவ்வாறு மாணவர்களை வழி நடத்தும் பெற்றோர்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றி விளக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற பெற்றோர்கள் பெரும்பாலோனோர் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு மாணவிகளுக்கும் இடையூறாக இருப்பதாகவும், இதனால் சில பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் சூழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து இடைநிற்றல் ஏற்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்ததோடு தேவதானப்பட்டியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றி அமைத்தும், ஆண்களுக்கு என்று தனியான பள்ளியை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருசில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டியது, அதனால் ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக் கோரி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்தது சம்பவங்களால் மேலும் பெண் குழந்தைகள் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் காட்டும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் பள்ளியை மாணவிகளுக்கான பள்ளியாக மாற்ற வேண்டும் என்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.