ஆசை வார்த்தை கூறி பலாத்கார முயற்சி செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படுகை அணை ஆற்றில் இளம்பெண் ஒருவர் 60 அடி உயர பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 60 அடி உயர ஆற்றுப்பாலத்தில் இருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது பிளஸ் டூ மாணவி என்பதும் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் மாணவியை காணவில்லை என்றும் இது குறித்து பெற்றோர்கள் பல இடத்தில் தேடியதும் மறுநாள் காலை வீட்டுக்கு வந்ததும் அந்த மாணவியை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர் இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் தனியார் பேருந்தில் டிக்கெட் பரிசோதகராக வேலை செய்யும் பாபு என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி, கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாபுவை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டிற்கு பயந்து 60 அடி பாலத்திலிருந்து மாணவி ஆற்றில் குதித்ததும், பிளஸ் டூ மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.