Categories: தமிழகம்

‘முதல் தவணை பணத்தை விடுவிக்க முடியாது’… மிரட்டும் பஞ்சாயத்து தலைவர்… பிரதமரின் வீடுகட்டும் திட்டப் பயனாளி தற்கொலை செய்ய முடிவு…!

நீடாமங்கலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டி வரும் பயனாளிக்கு முதல் தவணை பணத்தை விடுவிக்க  முடியாது என பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் மிரட்டுவதால், பயனாளி தற்கொலை செய்ய முடிவுக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் புள்ளவராயன் குடிகாடு, இக்கிராமத்தை சேர்ந்த சந்திரா என்பவர் புள்ளவராயன்குடிகாடு பஞ்சாயத்தில்  ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இவர் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு செய்துள்ளார்.  இவரது மனுவினை பரிசீலித்த அதிகாரிகள் இவரது இடத்தை ஆய்வு செய்து வீடுகட்ட அனுமதி வழங்கியுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்களது சொந்தப்பணத்தில் அடித்தளம் அமைத்து அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபிறகு, அதற்கு உண்டான தவணை பணத்தை அதிகாரிகள் விடுவிப்பார்கள்.  அதனை அடுத்து லிண்டன் வரையிலான பகுதி, ரூஃப் மேல்தளம் கான்கீரிட் என பகுதி பகுதியாக முடிவடைந்த பணிகளை ஆய்வு செய்து, பின்னர் அதற்கு உண்டான பணத்தை அதிகாரிகளால் விடுவிக்கப்படவேண்டும் என்பது அரசின் விதிமுறைகள்.

இத்தகைய அரசின் விதிமுறையின்படி துப்புரவு தொழிலாளர் சந்திரா தனக்கு சொந்தமான இடத்தில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அடித்தளம் அமைத்துள்ளார்.  பின்னர், இதற்கு உண்டான ஆதாரங்களை நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து பணத்தை விடுவிக்க கோரி மனு செய்துள்ளார். 

ஆனால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட  துறை அதிகாரிகள், இதற்கு உண்டான பணத்தை விடுவிக்காமல் பயனாளி சந்திராவை அலைக்கழிப்பதாகவும், உறவினர் இடத்தில் அரை அடி தள்ளி வீடு கட்டுவதாக உணமைக்கு புறம்பாக கூறி வீட்டின்  தவணைத்தொகையை வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே வீட்டின் அடித்தளம் அமைக்கும் பணிக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்கி அவதியுற்று வரும் பயனாளி சந்திரா, வீடு அமைப்பதற்கு தளம் போட்டு ஓர் ஆண்டுகள் முடிவடையும் நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்  மற்றும் அமமுக  ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பல்வேறு  காரணங்களை கட்டி  முதல் தவணை பணத்தை விடுவிக்காமல், பிரதமர் வீடு வழங்கிய லிஸ்டில் இருந்து உனது பெயரை கேன்சல் செய்திடுவதாகவும் மிரட்டுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சேரவேண்டிய வீட்டின் அடித்தளத்திற்கான முதல் தவணை தொகையை விடுவிக்க முன்வராவிடில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என சந்திரா மனவேதனை தெரிவித்துள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

14 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

15 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

16 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

16 hours ago

This website uses cookies.