பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என்றும் பாமகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் கே பாலு பேசியதாவது:- 1996ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 தேர்தலை சந்தித்தார். அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்கு பா.ம.க. தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.
மைனாரிட்டி திமுக என அதிமுகவால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு அளித்த பா.ம.க., கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என சொல்லியதில்லை, என தெரிவித்தார்.
பாமகவிற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யாரெனக் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பாலு, நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும், அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும் என்ற அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியை 2 ஆண்டுகள் தொடர்வதற்கும், ஜெயகுமார் அமைச்சராக தொடர்வதற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போதும் சொல்லியதில்லை என்று கூறினார்.
அதிமுக வீழ்ந்தபோதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவை செயல்பாடுகளை எப்போதும் மறக்க கூடாது எனவும், ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும் என்றும் கூறினார்.
பாஜக வாட்ச், திமுகவிற்கு மக்களிடம் அதிருப்தி போன்றவை குறித்தும் பொதுக்குழுவில் பேசியதாகவும், அதிமுகவை பற்றி மட்டும் பேசவில்லை எனக் கூறிய வழக்கறிஞர் பாலு, மக்களுக்கு தேவையானவற்றை ஆட்சியாளர்களிடம் பெறும் பணியை பாமக தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவித்தார்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.